ஆய்வு விளக்கம்
"சாண்டில்யன் நாவல்கள் ஒரு வரலாற்றுப் பார்வை(கடல்புறா ராஜபோகை") என்பது
ஆய்வுத்தலைப்பாகும்
இவ்வாய்வில் விளக்க முறை அணுகுமுறையும் ஒப்பீட்டு அணுகுமுறையும் பகுப்பாய்வு
முறையிலும் அமைந்துள்ளன
இவ்வாய்வு முன்னுரை முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களைக் கொண்டுள்ளது
1 வரலாற்று நாவலில் சாண்டில்யன் பெறுமிடம்
2 நாவல்களின் கதைச் சுருக்கங்கள்
3 நினைவில் நிற்கும் கதை மாந்தர்களின் சிறப்பு
4 வரலாறும் வரலாற்றுப் பின்புலமும்
5 நாவர்களின் தனித்தன்மைகள்
6 கடல்புறா ராஜபேரிகை நாவல்களில் உத்திகள்
வரலாற்று நாவல்களின் உள்கட்டமைப்புக் கூறுபாடுகள் பலவாக இருக்கலாம் முன்னோர்
பெருமைகளோன கலை பண்பாட்டு செய்திகள் அரசியரில் ஏற்றத் தாழ்வுகள் இப்படிப்படிப்ப
உணர்வுகளை எடுத்துச் சொல்லும் நோக்கம் பிறக்கும் பொழுதெல்லாம் இவ்வகை வரலாற்று
நாவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கும் வரலாற்று நாவல் என்ற பெரும் கலைவடிவத்தை
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கையாண்ட போதும் அதன் நோக்கங்கள் என்று
பார்க்கும் போது மாறுபட்ட தண்மகளே பொருளாக விளங்குகிறது ஆகவே தான் இன்றைய
நூற்றாண்டில் மக்களால் பெரிதும் போற்றப்படும் எழில்மிகு ஏற்றம் கொண்ட கலை வடிவமாக
புதினம் சிறப்புடன் விளங்குகிறது தன் கருத்துக்களையும் நோக்கங்களையும்
வெளிப்படுத்துவதற்கு புதினத்தை ஒரு கலைக் கருவியாகக் கொண்டு இன்பச்சுவைகளுடன்
நல்அறிவுச் சுவைகளையும் இணைக்கும் போதுதான் வரலாற்று நாவல் வனப்புமிக்க நாவலாக
வண்ணம் பெறுகிறது ஆகவேதான் கடந்தகால வாழ்வையும் அவற்றின் பரிமாணங்களையும்
நிகழ்கால சமுதாய மக்களுக்கு நிரல்படுத்தப்பட்ட உண்மைகளை எதிர்கால
மக்களுக்கு நல்வழி காட்டுகிறது என்று நாம் அறுதியிட்டுக் கூறலாம்