ஆய்வு விளக்கம்
தமிழ் இலக்கிய உலகில் தன் படைப்பில் தமிழ் உள்ளங்களைத் தன் வயப்படுத்திய ராய. சொக்கலிங்கம் தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் பங்கும் பணியும் எத்தகையது எனக் காண்பதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது.
பகுப்பாய்வு, விளக்க அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன
இல்லை
இவ்வாய்வேடு,
1. செய்யுள்பணி
2. உரைநடைப்பணி
3. ஆராய்ச்சிப் பணி
4. பதிப்பு, தொகுப்புப்பணி
5. இதழியல் பணி
ஆகிய இயல்களைக் கொண்டது.
ராய. சொ. பல்நோக்குத்திறன் உடையவராய் விளங்குகின்றார். இவரின் கவிதைகளில் புரட்சிக் கருத்துக்களும், பெண் உரிமையும், நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், மக்களியமும் பேசப்படுகின்றன.
செய்யுள் நூல்கள் அனைத்தும் காந்தியின் மீது கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது கண்டறியப்பட்டது.
தீண்டாமை அகற்றுதல், மதுவிலக்கு, கைத்தொழிலன் மேன்மை, பஞ்சாயத்துதறை போன்றவைகளும் இவரது கவிதைகளில் சிறப்பிடம் பெறுகின்றன.
இவரது உரைநடை நூல்கள் இயற்கை அழகையும், வாழ்க்கை அறங்களையும் கூறுவதாக அமைந்துள்ளன.
உரைநடையின் முக்கியக் கூறுகளான கருத்துச் சிறப்பு, சொல் தேர்ச்சி, மொழிநடை ஆகியன எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
பிறமொழிக் கலப்பின்றி, தமிழ் சொற்களால் ஆன ஆற்றொழுக்கு நடையினைப் பின்பற்றியுள்ளார்.